என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல்லில் வியாபாரிகளால் களை கட்டிய புளிச்சந்தை
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, மருனூத்து, கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புளிய மரங்கள் அதிக அளவில் வளர்த்து பராமரிக்கப்படுகின்றன. இவை சொந்தமாகவும் பல மரங்கள் குத்தகைக்கு விட்டும் வளர்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் இரு முறை புளியம்பழங்கள் உலுக்கி பின்னர் தரம் பிரிக்கப்பட்டு வியாபாரிகளால் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திண்டுக்கல் நாகல்நகரில் விற்பனைக்கு வருவார்கள். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் பொதுமக்களும் நேரடியாக வந்து புளியம்பழங்களை வாங்கிச் செல்வார்கள்.
தற்போது நாகல் நகரில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் புளியம் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.40 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் நேரடியாக வாங்கப்படுவதால் விலை குறைவாக இருப்பதுடன் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் புளி வாங்கிச் சென்றனர்.
இந்த சந்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் வியாபாரம் வரும் நாட்களில் மேலும் விறுவிறுப்படையும் என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்