search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாணியம்பாடியில் 4-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் - 50 பேர் மீது வழக்குப்பதிவு

    வாணியம்பாடியில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    வாணியம்பாடி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட திடலில் தொழுகை நடத்தியும், போராட்ட திடலிலே உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்று உள்ளதாக கூறி போலீசார் குழந்தைகளை வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று கூறியதால் போலீசார் அங்கிருந்து சென்றனர். இதனால் போராட்டம் செய்யும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அனுமதியின்றி முஸ்லிம்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×