என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் 4-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் - 50 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்22 Feb 2020 12:38 PM GMT (Updated: 22 Feb 2020 12:38 PM GMT)
வாணியம்பாடியில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட திடலில் தொழுகை நடத்தியும், போராட்ட திடலிலே உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்று உள்ளதாக கூறி போலீசார் குழந்தைகளை வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று கூறியதால் போலீசார் அங்கிருந்து சென்றனர். இதனால் போராட்டம் செய்யும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி முஸ்லிம்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட திடலில் தொழுகை நடத்தியும், போராட்ட திடலிலே உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்று உள்ளதாக கூறி போலீசார் குழந்தைகளை வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று கூறியதால் போலீசார் அங்கிருந்து சென்றனர். இதனால் போராட்டம் செய்யும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி முஸ்லிம்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X