என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயம்- தந்தை புகார்
Byமாலை மலர்17 Feb 2020 5:07 PM GMT (Updated: 17 Feb 2020 5:07 PM GMT)
சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் முஸ்லீம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீது. இவரது மகள் ஷிபானா (வயது 23). இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் முறைப்படி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதையடுத்து ஷிபானா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்க சென்றவரை இன்று காலையில் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஷிபானாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என பல்வேறு பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இது குறித்து ஹமீது சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷிபானாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X