என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டாக 42 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் பயணிகள், பொது மக்களை கவரும் விதமாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணத்தின் போது ‘ஸ்மார்ட்’ சைக்கிள் மற்றும் சிறிய அளவிலான மடக்கு சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது சொந்த சைக்கிள்கள் மற்றும் ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது எடுத்து செல்ல அனுமதி வழங்கி உள்ளோம்.
இதன் மூலம் பயணிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் சைக்கிளை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது உடன் எடுத்து செல்லலாம். ரெயிலில் யாருக்கும் இடையூறு இல்லாதவாறு கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஆட்டோவில் வரும் பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மிச்சப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்