என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்13 Feb 2020 10:25 AM GMT (Updated: 13 Feb 2020 10:25 AM GMT)
திருக்கனூரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு ரெட்டியார் வீதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 55). இவர் நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.
ஆனால், இந்த தொழிலுக்கு இவரது மகன் கதிரவன் (27) உதவி செய்யாமல் இருந்து வந்தார். நெல் அறுவடை வேலைக்கு அழகப்பன் அழைக்கும்போதெல்லாம் கதிரவன் செல்லாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக தந்தை-மகனுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
அதுபோல் நேற்றும் அவர்களிடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அழகப்பன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை திருக்கனூர் ஏரிக்கரையில் அழகப்பன் இறந்து கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அழகப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு ரெட்டியார் வீதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 55). இவர் நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.
ஆனால், இந்த தொழிலுக்கு இவரது மகன் கதிரவன் (27) உதவி செய்யாமல் இருந்து வந்தார். நெல் அறுவடை வேலைக்கு அழகப்பன் அழைக்கும்போதெல்லாம் கதிரவன் செல்லாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக தந்தை-மகனுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
அதுபோல் நேற்றும் அவர்களிடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அழகப்பன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை திருக்கனூர் ஏரிக்கரையில் அழகப்பன் இறந்து கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அழகப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X