என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.எஸ்.மங்கலம் அருகே விவசாயி அடித்துக்கொலை- 3 பேர் கைது
Byமாலை மலர்11 Feb 2020 10:16 AM GMT (Updated: 11 Feb 2020 10:16 AM GMT)
ஆர்.எஸ்.மங்கலம் அருகே வயலுக்கு தீ வைத்த தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், ராதானூர் அருகே உள்ள ஏந்தல் கரையைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 50) விவசாயி. இவரது வயலில் அறுவடை முடிந்த நிலையில் கழிவுகளை நேற்று இரவு தீ வைத்து எரித்தார்.
அப்போது அருகில் இருந்த சண்முகம் என்பவரின் வயலிலும் தீ பரவியதால் அங்கிருந்த பயிர்கள் கருகியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை பயிர்கள் கருகியிருந்ததை பார்த்த சண்முகம், கருப்பையாவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சண்முகம், அவரது உறவினர் கருப்பையா (65), அவரது மனைவி வள்ளி ஆகிய 3 பேரும் சேர்ந்து கருப்பையாவை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் தொடர்பாக சண்முகம், கருப்பையா, வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், ராதானூர் அருகே உள்ள ஏந்தல் கரையைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 50) விவசாயி. இவரது வயலில் அறுவடை முடிந்த நிலையில் கழிவுகளை நேற்று இரவு தீ வைத்து எரித்தார்.
அப்போது அருகில் இருந்த சண்முகம் என்பவரின் வயலிலும் தீ பரவியதால் அங்கிருந்த பயிர்கள் கருகியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை பயிர்கள் கருகியிருந்ததை பார்த்த சண்முகம், கருப்பையாவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சண்முகம், அவரது உறவினர் கருப்பையா (65), அவரது மனைவி வள்ளி ஆகிய 3 பேரும் சேர்ந்து கருப்பையாவை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் தொடர்பாக சண்முகம், கருப்பையா, வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X