search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே விவசாயி அடித்துக்கொலை- 3 பேர் கைது

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே வயலுக்கு தீ வைத்த தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், ராதானூர் அருகே உள்ள ஏந்தல் கரையைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 50) விவசாயி. இவரது வயலில் அறுவடை முடிந்த நிலையில் கழிவுகளை நேற்று இரவு தீ வைத்து எரித்தார்.

    அப்போது அருகில் இருந்த சண்முகம் என்பவரின் வயலிலும் தீ பரவியதால் அங்கிருந்த பயிர்கள் கருகியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை பயிர்கள் கருகியிருந்ததை பார்த்த சண்முகம், கருப்பையாவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சண்முகம், அவரது உறவினர் கருப்பையா (65), அவரது மனைவி வள்ளி ஆகிய 3 பேரும் சேர்ந்து கருப்பையாவை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் தொடர்பாக சண்முகம், கருப்பையா, வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×