search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வல்லம் அருகே மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

    வல்லம் அருகே மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வல்லம்:

    தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள முன்னையம் பட்டி பிரிவு சாலை அருகே நேற்று வல்லம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் வல்லம் அருகே உள்ள நாட்டாணியை சேர்ந்த சதீஷ் குமார்(32) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வல்லம் போலீசார் சதிஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×