என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்துக்கு சென்ற இடத்தில் 2 மகன்களுடன் உயிரிழந்த தந்தை - உருக்கமான தகவல்கள்
Byமாலை மலர்10 Feb 2020 9:20 AM GMT (Updated: 10 Feb 2020 9:20 AM GMT)
நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு சென்ற இடத்தில் 2 மகன்களுடன் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவரது மனைவி சுப்புலெட்சுமி. இந்த தம்பதியின் மகன்கள் சவுந்தர் (20), விக்னேஷ் (17).
செல்வராஜ் தனது மனைவி குடும்பத்துடன் நாகர்கோவில் கோட்டார் கரியமாணிக்கபுரத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தெருவில் வசித்து வந்தார். செல்வராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார்.
செல்வராஜின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் கொல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக செல்வராஜ் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் கொல்லத்திற்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை செல்வராஜ் தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்போது அங்கு உள்ள குளத்தில் அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக சென்றனர்.
முதலில் விக்னேஷ் குளத்தில் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வராஜும், சவுந்தரும் அவரை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தனர்.
ஆனால் அவர்கள் 3 பேருமே தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். கோவிலுக்கு சென்ற தந்தையும், மகன்களும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி உறவினர்கள் சென்ற போதுதான் இந்த பரிதாப சம்பவம் பற்றி தெரிய வந்தது.
கணவன், 2 மகன்களின் உடலை பார்த்து சுப்புலெட்சுமி கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. குளத்தில் மூழ்கி 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
பலியான செல்வராஜ், கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர். அவரது முறை பெண்ணான சுப்பு லெட்சுமியை திருமணம் செய்து கொண்டபிறகு சுமார் 20 வருடத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு குடி பெயர்ந்தார். கரியமாணிக்கபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தனர்.
முதலில் செல்வராஜ் இங்கு நகை ஆசாரியாக தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நலிவடைந்ததால் செல்வராஜ் இங்குள்ள அகமத்கார்டன் ஆட்டோ ஸ்டான்டில் இருந்து ஆட்டோ ஓட்டிவந்தார். மூத்த மகன் சவுந்தர் பி.காம் முடித்து விட்டு ஒரு ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இளைய மகன் விக்னேஷ் நாகர் கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்துவந்தார்.
நாகர்கோவில் வந்தபிறகு இவர்கள் மிக முக்கியமான உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கேரளா சென்றுவந்தனர். தற்போதும் நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால் கேரளா சென்றபோது குளத்தில் மூழ்கி பலியாகி விட்டனர்.
செல்வராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் பலியான தகவல் நாகர்கோவிலில் உள்ள அவரது சக ஆட்டோ டிரைவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரியமாணிக்கப்புரத்தில் உள்ள செல்வராஜின் வீட்டு முன்பு அவர்கள் சோகத்துடன் திரண்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நாகர்கோவில் கொண்டுவரப்படும் என்று நினைத்திருந்தனர்.
ஆனால் செல்வராஜின் உறவினர்கள் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பிறகு கொல்லத்திலேயே தகனம் செய்ய முடிவு செய்து உள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவரது மனைவி சுப்புலெட்சுமி. இந்த தம்பதியின் மகன்கள் சவுந்தர் (20), விக்னேஷ் (17).
செல்வராஜ் தனது மனைவி குடும்பத்துடன் நாகர்கோவில் கோட்டார் கரியமாணிக்கபுரத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தெருவில் வசித்து வந்தார். செல்வராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார்.
செல்வராஜின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் கொல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக செல்வராஜ் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் கொல்லத்திற்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை செல்வராஜ் தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்போது அங்கு உள்ள குளத்தில் அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக சென்றனர்.
முதலில் விக்னேஷ் குளத்தில் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வராஜும், சவுந்தரும் அவரை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தனர்.
ஆனால் அவர்கள் 3 பேருமே தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். கோவிலுக்கு சென்ற தந்தையும், மகன்களும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி உறவினர்கள் சென்ற போதுதான் இந்த பரிதாப சம்பவம் பற்றி தெரிய வந்தது.
கணவன், 2 மகன்களின் உடலை பார்த்து சுப்புலெட்சுமி கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. குளத்தில் மூழ்கி 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
பலியான செல்வராஜ், கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர். அவரது முறை பெண்ணான சுப்பு லெட்சுமியை திருமணம் செய்து கொண்டபிறகு சுமார் 20 வருடத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு குடி பெயர்ந்தார். கரியமாணிக்கபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தனர்.
முதலில் செல்வராஜ் இங்கு நகை ஆசாரியாக தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நலிவடைந்ததால் செல்வராஜ் இங்குள்ள அகமத்கார்டன் ஆட்டோ ஸ்டான்டில் இருந்து ஆட்டோ ஓட்டிவந்தார். மூத்த மகன் சவுந்தர் பி.காம் முடித்து விட்டு ஒரு ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இளைய மகன் விக்னேஷ் நாகர் கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்துவந்தார்.
நாகர்கோவில் வந்தபிறகு இவர்கள் மிக முக்கியமான உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கேரளா சென்றுவந்தனர். தற்போதும் நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால் கேரளா சென்றபோது குளத்தில் மூழ்கி பலியாகி விட்டனர்.
செல்வராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் பலியான தகவல் நாகர்கோவிலில் உள்ள அவரது சக ஆட்டோ டிரைவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரியமாணிக்கப்புரத்தில் உள்ள செல்வராஜின் வீட்டு முன்பு அவர்கள் சோகத்துடன் திரண்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நாகர்கோவில் கொண்டுவரப்படும் என்று நினைத்திருந்தனர்.
ஆனால் செல்வராஜின் உறவினர்கள் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பிறகு கொல்லத்திலேயே தகனம் செய்ய முடிவு செய்து உள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X