என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்6 Feb 2020 8:35 AM GMT (Updated: 6 Feb 2020 8:35 AM GMT)
நாகர்கோவிலில் குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது34). தொழிலாளி.
இவர் குடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சரவணகுமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் அவர், மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து மனைவி வெளியில் சென்றிருந்தார். சரவணகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனால் வலியில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
சரவணகுமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது34). தொழிலாளி.
இவர் குடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சரவணகுமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் அவர், மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து மனைவி வெளியில் சென்றிருந்தார். சரவணகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனால் வலியில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
சரவணகுமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X