search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    நாமகிரிப்பேட்டை அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதி பெண் பலி

    நாமகிரிப்பேட்டை அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் பெண் பலியானார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
    நாமகிரிப்பேட்டை:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி சுஜாதா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சுஜாதா நேற்று அதே பகுதியை சேர்ந்த கீதா (55) என்பவருடன் ஸ்கூட்டரில் மகளிர் சுயஉதவிக்குழு கூட்டத்திற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சுஜாதா ஓட்டினார். கீதா பின்னால் அமர்ந்து வந்தார். நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர்பந்தல்காடு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த வேன் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கீதா படுகாயம் அடைந்து போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த கீதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் பலியான சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடி வருகிறார்.
    Next Story
    ×