search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஒரத்தநாடு அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது

    ஒரத்தநாடு அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    ஒரத்தநாடு அருகே உள்ள புதுவிடுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடய மகன் அருள்பாண்டியன் (வயது 28), புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள காடாத்தி கிராமம் புதுவிடுதி வடக்குதெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (42), சாராய வியாபாரிகளான அருள்பாண்டியன், இளங்கோவன் மீது தஞ்சை மாவட்ட மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா சாராய வியாபாரிகளான அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×