search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து தற்கொலை
    X
    தீக்குளித்து தற்கொலை

    மதகடிப்பட்டில் மகன் இறந்த வேதனையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

    மதகடிப்பட்டில் மகன் இறந்த வேதனையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    மதகடிப்பட்டு- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது64). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் இறந்து போனார். இவர்களது மூத்த மகன் தில்லைவளவன் தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார். இதனால் செண்பகவள்ளி தனது இளைய மகன் மணிகண்டன் (30) என்பவருடன் வசித்து வந்தார்.

    இதற்கிடையே உடல்நலகுறைவால் மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார். மணிகண்டன் இறந்து போனது முதல் அவரது நினைவாகவே செண்பக வள்ளி இருந்து வந்தார். உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தனது மகன் இறந்து போனதை அடிக்கடி கூறி செண்பகவள்ளி வருத்தப்பட்டு வந்தார்.

    பொங்கல் பண்டிகையன்று மணிகண்டனின் உருவ படத்தை பார்த்து கண்ணீர்விட்டு கதறிய செண்பகவள்ளி திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீபரவியதால் வலியால் அலறி துடித்த செண்பக வள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காகஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செண்பகவள்ளி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாப மாக இறந்த போனார்.

    இதுகுறித்து அவரது மூத்த மகன் தில்லைவளவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் குமார், ஏட்டு வசந்தராஜா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் உப்பளம் நேதாஜி நகர் முஸ்லிம் கல்லறை வீதியை சேர்ந்தவர் விஜய். கார் டிரைவர். இவரது மனைவி பல்கீஸ்பீ. இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே கடன் தொல்லையால் கடந்த 3 மாதத்துக்கு முன்பு விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்தது முதல் பல்கீஸ்பீ மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவரை இறந்த பின்னர் வாழபிடிக்காத பல்கீஸ்பீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பல்கீஸ்பீ நேற்று இரவு மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×