என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்றத்தூர் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ் - 30 பயணிகள் தப்பினர்
Byமாலை மலர்23 Jan 2020 10:13 AM GMT (Updated: 23 Jan 2020 10:13 AM GMT)
குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிந்ததில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பூந்தமல்லி:
சேலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி அரசு பஸ் இன்று காலை 8.30 மணியளவில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் கருப்பண்ணன் ஓட்டினார். கண்டக்டர் ஜெயச்சந்திரன் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி எதிர் திசை சாலையில் சென்று சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது.
இதில் பஸ்சில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ் டிரைவர், கண்டக்டர், பயனி தங்கராஜ் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
விபத்தில் காயமடைந்த 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் பள்ளத்தில் பாய்ந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். விபத்து காரணமாக தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி அரசு பஸ் இன்று காலை 8.30 மணியளவில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் கருப்பண்ணன் ஓட்டினார். கண்டக்டர் ஜெயச்சந்திரன் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி எதிர் திசை சாலையில் சென்று சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது.
இதில் பஸ்சில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ் டிரைவர், கண்டக்டர், பயனி தங்கராஜ் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
விபத்தில் காயமடைந்த 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் பள்ளத்தில் பாய்ந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். விபத்து காரணமாக தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X