search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடும்ப தகராறில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

    நாகர்கோவில் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளையை அடுத்த நுள்ளிக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 38). தொழிலாளி. வினுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வினு வேலைக்கு செல்லாமல் இருந்ததை அவரது மனைவி கண்டித்தார். மேலும் வேலைக்கு செல்லும்படியும் வினுவை வற்புறுத்தினார். இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை மூண்டது.

    சம்பவதன்றும் இதுபோல கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த வினு வீட்டில் இருந்து புறப்பட்டு படந்தாலுமூடு சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு வி‌ஷம் குடித்தநிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலன் இன்றி வினு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசில் அவரது மனைவி வினி ஜாய் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருங்கல் பாலபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதில் மனம் உடைந்த ஜெயக்குமார், நேற்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×