என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்22 Jan 2020 12:24 PM GMT (Updated: 22 Jan 2020 12:24 PM GMT)
நாகர்கோவில் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
களியக்காவிளையை அடுத்த நுள்ளிக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 38). தொழிலாளி. வினுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வினு வேலைக்கு செல்லாமல் இருந்ததை அவரது மனைவி கண்டித்தார். மேலும் வேலைக்கு செல்லும்படியும் வினுவை வற்புறுத்தினார். இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை மூண்டது.
சம்பவதன்றும் இதுபோல கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த வினு வீட்டில் இருந்து புறப்பட்டு படந்தாலுமூடு சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு விஷம் குடித்தநிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலன் இன்றி வினு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களியக்காவிளை போலீசில் அவரது மனைவி வினி ஜாய் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் பாலபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதில் மனம் உடைந்த ஜெயக்குமார், நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளையை அடுத்த நுள்ளிக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 38). தொழிலாளி. வினுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வினு வேலைக்கு செல்லாமல் இருந்ததை அவரது மனைவி கண்டித்தார். மேலும் வேலைக்கு செல்லும்படியும் வினுவை வற்புறுத்தினார். இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை மூண்டது.
சம்பவதன்றும் இதுபோல கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த வினு வீட்டில் இருந்து புறப்பட்டு படந்தாலுமூடு சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு விஷம் குடித்தநிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலன் இன்றி வினு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களியக்காவிளை போலீசில் அவரது மனைவி வினி ஜாய் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் பாலபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதில் மனம் உடைந்த ஜெயக்குமார், நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X