என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
படப்பை அருகே வடமாநில பெண் கற்பழித்து கொலை
படப்பை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கர்ணா பிரியதர்ஷினி (20). இவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா குமாரி ஷாகு (22).
இவர்கள் இருவரும் படப்பை அடுத்த ஆதனஞ்சேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.ஓரகடத்தில் உள்ள பிரபல மோட்டார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை ரஞ்சிதா குமாரி ஷாகு வழக்கம் போல காலை ஷிப்ட் வேலைக்கு சென்று விட்டார். கர்ணா பிரியதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தார்.
மாலை வேலை முடிந்து தோழி ரஞ்சிதா குமாரி ஷாகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கர்ணா பிரியதர்ஷினி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கர்ணா பிரிய தர்ஷினி உடலில் நகக் கீறல்கள், ரத்த காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த கர்ணா பிரிய தர்ஷினியை கற்பழித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை பரிசோத னைக்காக ஸ்ரீ பெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வடமாநில இளம்பெண் கர்ணா பிரியதர்ஷினியை கற்பழித்து கொன்றது யார்? என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்