search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி மீனவர் பலி

    கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உதயா (வயது 37) மீனவர்.

    இன்று காலை அவர் ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் உதயா மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே மீனவர் உதயா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×