search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கமுதி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

    கமுதி அருகே கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கமுதி:

    கமுதி அருகே உள்ள பேரையூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அய்யனார்புரம் பஸ் நிறுத்தப்பகுதியில் சென்ற போது, அங்கு நின்ற 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் சோதனை செய்தனர். இதில் மறைத்து வைத்திருந்த கஞ்சா சிக்கியது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் அவர்களது பெயர் விஜய பாண்டி (வயது 23), கரண் (17), பழனிச்சாமி (31) என தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×