search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    கோவை சரவணம்பட்டியில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு

    கோவையில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் குமரன் நகரில் வசித்து வருபவர் வினோத் (30). லேத் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    பொங்கல் விடுமுறையையொட்டி இவர் தனது குடும்பத்துடன் ஓசூர் சென்றார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் வினோத் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. வினோத் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×