என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்குறுங்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்16 Jan 2020 4:55 PM GMT (Updated: 16 Jan 2020 5:39 PM GMT)
திருக்குறுங்குடி அருகே மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்த பெண்ணை மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் சுசிகர்ராஜ் (வயது 55). இவர் சூரங்குடியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை மாரியம்மாள் வீட்டில் மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறியபடியே மயங்கி விழுந்தார்.
இதைக்கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு வள்ளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X