என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 2 ஆண்கள் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலியான இருவரும் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு சுமார் 50 வயது இருக்கும். தண்டவாளத்தை கடந்தபோது ஆந்திரா மார்க்கமாக சென்ற ரெயில் மோதி இருவரும் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் லுங்கி, சட்டை அணிந்து இருந்தனர்.
எனவே அவர்கள் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து ஆரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்