search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gummidipundi"

    • ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.
    • தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி நகரில் தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்ப டுகிறது. மேலும் இந்த ஏரி முழுவதும் தாமரை இலைகள் பரவி காணப்படுகிறது. நீர்வளத்துறையினர் இந்த ஏரியை பராமரித்து வருகிறார்கள். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான இந்த ஏரி மாசடைந்து வருகிறது. இந்த ஏரியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்த குட்டையாக மாறி வருகிறது.

    தாமரை ஏரியின் வடக்கு திசையில் பெத்தி குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட அருண் நகர் உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஏரியின் அருகாமையில் ஈஸ்வரன், அய்யாசாமி ஆகிய கோவில்களும் உள்ளன. இங்கு வருபவர்கள் ஏரி தண்ணீரை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    அப்பகுதி வாசிகள் தாமரை ஏரியில் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.

    தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×