என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் தனியார் வங்கி உதவி மேலாளர் தற்கொலை
Byமாலை மலர்13 Jan 2020 4:07 PM GMT (Updated: 13 Jan 2020 4:07 PM GMT)
சேலம் தனியார் வங்கி உதவி மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் நெத்திமேடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 24). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் சம்பந்தமான லோன் கொடுக்கும் பிரிவு உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் மோகன்ராஜ் வீட்டில் இருந்தார். இரவு அவரது தாய் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் வெளியே கடைக்கு சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மோகன்ராஜ் வீட்டிற்குள் வேட்டியை கழுத்தில் மாட்டி தூக்கில் தொங்கினார். இதில், கழுத்து இறுகி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் வெளியே சென்றிருந்த தாய் மற்றும் அவரது அண்ணன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில், மோகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது பற்றி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X