என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா-அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Byமாலை மலர்13 Jan 2020 10:30 AM GMT (Updated: 13 Jan 2020 10:30 AM GMT)
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
இந்திய மாநிலங்களில் மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் முதன்மை மாநிலம் என்று துறைதோறும் முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு அரசாம் கழக அரசின் சாதனைகள்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியின் சிறப்பு.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்.
அதே போல், 25-ந்தேதி அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
இந்திய மாநிலங்களில் மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் முதன்மை மாநிலம் என்று துறைதோறும் முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு அரசாம் கழக அரசின் சாதனைகள்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியின் சிறப்பு.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்.
அதே போல், 25-ந்தேதி அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X