search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

    புதுவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் பெண் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் தோட்டத்தின் வழியாக உள்ளே புகுந்த முருகன் மின் விளக்கை அணைத்து விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனாலும், முருகன் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முருகனை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவரை கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×