என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெட்டியார்பாளையத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Jan 2020 10:01 AM GMT (Updated: 10 Jan 2020 10:01 AM GMT)
ரெட்டியார்பாளையத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் புதுநகர் அணைக்கரை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகன் (வயது47). இவர் கதிர்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கலா (39). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அதுபோல நேற்றும் வேலைக்கு செல்லாமல் முருகன் மதுகுடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு வழக்கம்போல் கலா வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலை வேலைமுடிந்து கலா வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் அறையில் மின் விசிறியில் கயிறால் முருகன் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரெட்டியார்பாளையம் புதுநகர் அணைக்கரை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகன் (வயது47). இவர் கதிர்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கலா (39). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அதுபோல நேற்றும் வேலைக்கு செல்லாமல் முருகன் மதுகுடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு வழக்கம்போல் கலா வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலை வேலைமுடிந்து கலா வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் அறையில் மின் விசிறியில் கயிறால் முருகன் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X