search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் மாயம்
    X
    பெண் மாயம்

    கணவர் கண்டித்ததால் குழந்தையுடன் பெண் மாயம்

    சூலூர் அருகே கணவர் கண்டித்ததால் குழந்தையுடன் பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 34). இவரது மனைவி பாக்கிய லட்சுமி (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி திடீரென மாயமானார். இதையடுத்து நல்லமுத்து மாயமான பாக்கிய லட்சுமியை கண்டுபிடித்து சமாதானம் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்து வந்தார்.

    பின்னர் இருவரும் குழந்தைகளுடன் சுல்தான் பேட்டை அருகே உள்ள போகம்பட்டியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதையடுத்து பாக்கிய லட்சுமி மீண்டும் அந்த வாலிபருடன் அடிக்கடி போனில் பேசிவந்தார். இதை கண்ட நல்லமுத்து மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாக்கிய லட்சுமி தனது 2-வது மகள் ஸ்ரீபிரீத்தியுடன் மீண்டும் வீட்டை விட்டு மாயமானார்.

    நல்லமுத்து பல இடங்களில் தேடியும் பாக்கியலட்சுமி கிடைக்காததால் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் தனது மனைவி அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×