search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் செரின் (வயது 25). இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் இவர் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக கூறிவந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து அவரது மனைவி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் சிவசங்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×