என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் ஆசிரியரை கத்தியால் குத்தி நகை-பணம் பறிப்பு
மதுரை:
மதுரை பசுமலை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் தெற்கு மாரட் வீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
செல்வக்குமார் நேற்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் வகுப்பறைக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டது.
திடீரென்று அந்த மர்ம கும்பல் ஆசிரியர் செல்வகுமாரை சரமாரியாக கத்தியால் குத்தியது. இதனால் அலறியபடி அவர் கீழே விழுந்தார்.
பின்னர் அந்த கும்பல் ஆசிரியரின் சட்டைப்பையில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
படுகாயமடைந்த செல்வகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை குத்திவிட்டு நகை, பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்