என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்6 Jan 2020 4:01 PM GMT (Updated: 6 Jan 2020 4:01 PM GMT)
சேலத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சொர்ணலதா (வயது 31). இவர் ஜலகண்டாபுரம் அருகே சவுரியூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டின் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.
அங்கு மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 2 பேர் வந்தனர். திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் சொர்ணலதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டார்.
இதனால் திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அங்கிருந்த சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சொர்ணலதா சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X