என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்3 Jan 2020 4:14 PM GMT (Updated: 3 Jan 2020 4:14 PM GMT)
கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புகுழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசும்போது, வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போடவேண்டும். முகாம் நடைபெறும் இடங்களுக்கு வாகன வசதி, மின்சாரம் வசதி செய்வதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X