என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளையில் டீ கடைக்காரர் வீட்டில் திருட்டு
Byமாலை மலர்3 Jan 2020 1:37 PM GMT (Updated: 3 Jan 2020 1:37 PM GMT)
திசையன்விளையில் டீ கடைக்காரர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை-நவ்வலடி ரோடு காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 45). இவர் மும்பையில் டீ கடை வைத்துள்ளார். நந்தகோபால் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
கடந்த 31-ந்தேதி இவரது மனைவி சேர்மகனி வீட்டை பூட்டி விட்டு மும்பை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திரங்கள் மற்றும் பட்டு சேலைகள் திருடு போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X