என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குமரி மாவட்டத்தில் கஞ்சா - அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அனுமதி இன்றி மது விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் கொல்லங்கோடை அடுத்த மணலி பகுதியில் வரும்போது அங்கு சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர், கேரள மாநிலம் தெங்கிலாவு பகுதியை சேர்ந்த சஜின் ஜெயக்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த பையில் ½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இரணியல் போலீஸ் சப்-இனஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின், மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இரணியல் ரெயில்வே பாலம் அருகில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர் தலக்குளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நெட்டாங்கோடு பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி ரோந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக செல்வகுமார் (42) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்