search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது

    ராயபுரத்தில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    ராயபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த 27-ந்தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்க வில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமன் (24) என்பவர் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ராமன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராயபுரத்தில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    மாணவியுடன் நெருங்கி பழகிய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் செல்போனில் மாணவியிடம் பேசி ஆசை வார்த்தைகளை கூறி அவரை மயக்கியது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×