என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது
ராயபுரம்:
ராயபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த 27-ந்தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்க வில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமன் (24) என்பவர் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ராமன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராயபுரத்தில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
மாணவியுடன் நெருங்கி பழகிய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் செல்போனில் மாணவியிடம் பேசி ஆசை வார்த்தைகளை கூறி அவரை மயக்கியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்