என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை போலீசில் பெண்கள் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்அப்’ எண் அறிவிப்பு
Byமாலை மலர்18 Dec 2019 8:19 AM GMT (Updated: 18 Dec 2019 8:19 AM GMT)
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை போலீசில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை போலீசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பிரிவின் பெண் போலீஸ் அதிகாரியாக துணை கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை போலீசில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே கருத்துகளை வேண்டுகிறது.
உங்களது பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்தால் கீழ்க்கண்ட வசதிகளையப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். இத்தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான காவல்துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் செய்யலாம். www.facebook.com/chennai.police, dccwc.chennai@gmail.com ஆகியவற்றிலும் புகார் செய்யலாம்.
துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வளாகம்) ஆயிரம் விளக்கு, சென்னை-600 006 என்ற முகவரிக்கு தபாலிலும் புகாரை அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை போலீசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பிரிவின் பெண் போலீஸ் அதிகாரியாக துணை கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை போலீசில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே கருத்துகளை வேண்டுகிறது.
உங்களது பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்தால் கீழ்க்கண்ட வசதிகளையப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். இத்தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான காவல்துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் செய்யலாம். www.facebook.com/chennai.police, dccwc.chennai@gmail.com ஆகியவற்றிலும் புகார் செய்யலாம்.
துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வளாகம்) ஆயிரம் விளக்கு, சென்னை-600 006 என்ற முகவரிக்கு தபாலிலும் புகாரை அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X