என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் 301 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை
Byமாலை மலர்16 Dec 2019 10:12 AM GMT (Updated: 16 Dec 2019 10:12 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் 279 பதற்றமானவை, 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல் கட்டமாகவும், வருகிற 30-ந் தேதி அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.
இரு கட்ட தேர்தலிலும் 1704 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 279 பதற்றமானவை, 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30, தாராபுரத்தில் 21, குடிமங்கலத்தில் 28, காங்கயத்தில் 16, குண்டடத்தில் 6, மடத்துக்குளத்தில் 13, மூலனூரில் 4, பல்லடத்தில் 24, பொங்கலூரில் 26, திருப்பூரில் 17, உடுமலையில் 58, ஊத்துக்குளியில் 28, வெள்ளகோவிலில் 8 என மொத்தம் 279 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இதுபோல் பொங்கலூர் பகுதியில் 13, திருப்பூரில் 9 என மொத்தம் 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல் கட்டமாகவும், வருகிற 30-ந் தேதி அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.
இரு கட்ட தேர்தலிலும் 1704 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 279 பதற்றமானவை, 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30, தாராபுரத்தில் 21, குடிமங்கலத்தில் 28, காங்கயத்தில் 16, குண்டடத்தில் 6, மடத்துக்குளத்தில் 13, மூலனூரில் 4, பல்லடத்தில் 24, பொங்கலூரில் 26, திருப்பூரில் 17, உடுமலையில் 58, ஊத்துக்குளியில் 28, வெள்ளகோவிலில் 8 என மொத்தம் 279 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இதுபோல் பொங்கலூர் பகுதியில் 13, திருப்பூரில் 9 என மொத்தம் 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X