என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Dec 2019 11:56 AM GMT (Updated: 13 Dec 2019 11:56 AM GMT)
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க இளைஞர் அணியினர் 100 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
திண்டுக்கல்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜப்பா, துணை அமைப்பாளர்கள் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சூசைராபர்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், பெருமாள்சாமி, இலக்கிய அணி முருகானந்தம், விவசாய அணி இல.கண்ணன், நகர துணை செயலாளர் ஜானகிராமன், நகர பொருளாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சிலர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டனர். தி.மு.க இளைஞரணியின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட100 பேரை கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜப்பா, துணை அமைப்பாளர்கள் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சூசைராபர்ட் பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், பெருமாள்சாமி, இலக்கிய அணி முருகானந்தம், விவசாய அணி இல.கண்ணன், நகர துணை செயலாளர் ஜானகிராமன், நகர பொருளாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சிலர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டனர். தி.மு.க இளைஞரணியின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட100 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X