search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியசாமி
    X
    பெரியசாமி

    கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கி பலி

    கள்ளக்குறிச்சியில் கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் பெரியசாமி. (வயது 21).

    கள்ளக்குறிச்சி அருகே விடாந்தாங்கலில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவில் அர்ச்சகராக இருந்தார். நேற்று மாலை இவர் கார்த்திகை தீபத்தை கோவில் கோபுரத்தில் ஏற்ற உச்சி பகுதிக்கு ஏறினார். கோவிலில் கோபுரம் சீரியல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதனை கவனிக்காமல் பெரியசாமியின் கைவிரல் சீரியல் பல்புகள் உள்ள வயர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் கோபுரத்தில் இருந்து பெரியசாமி கீழே விழுந்தார். இதனை பார்த்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அர்ச்சகர் பெரியசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×