search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பெண் ஊழியர் மகளுக்கு செக்ஸ் தொல்லை: ஓசூர் அச்சக உரிமையாளர் தலைமறைவு

    ஓசூரில் பெண் ஊழியர் மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஓசூர் அச்சக உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அச்சகத்தில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 40 வயது மதிக்க பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். 

    இந்த நிலையில் அச்சக உரிமையாளர் பெண் ஊழியர் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதாக கூறப்படுகிறது. அந்த சமயம் அவர் ஊழியர் மகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி கண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் அச்சக உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்ததும் அச்சக உரிமையாளர் திடீரென்றுதலைமறைவாகி விட்டார். அச்சகமும் மூடி கிடக்கிறது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அச்சக உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    Next Story
    ×