என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் ஊழியர் மகளுக்கு செக்ஸ் தொல்லை: ஓசூர் அச்சக உரிமையாளர் தலைமறைவு
Byமாலை மலர்11 Dec 2019 1:02 PM GMT (Updated: 11 Dec 2019 1:02 PM GMT)
ஓசூரில் பெண் ஊழியர் மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஓசூர் அச்சக உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அச்சகத்தில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 40 வயது மதிக்க பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் அச்சக உரிமையாளர் பெண் ஊழியர் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதாக கூறப்படுகிறது. அந்த சமயம் அவர் ஊழியர் மகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி கண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் அச்சக உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்ததும் அச்சக உரிமையாளர் திடீரென்றுதலைமறைவாகி விட்டார். அச்சகமும் மூடி கிடக்கிறது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அச்சக உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X