search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடுகள் இறந்து கிடக்கும் காட்சி.
    X
    ஆடுகள் இறந்து கிடக்கும் காட்சி.

    காவேரிப்பட்டணத்தில் மர்ம விலங்குகள் கடித்து 8 ஆடுகள் பலி

    காவேரிப்பட்டணத்தில் ஆட்டு கொட்டகையில் இருந்த 8 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்ததில் துடி துடித்து இறந்து கிடந்தன.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ராயல் நகரை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது45). விவசாயியான இவருக்கு 24 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆடுகளை வீட்டின் அருகே கொட்டகையில் அடைத்து வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். 

    பின்னர் இரவு 11 மணி அளவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் அதிகமாக கேட்டது. இதனை கேட்ட பெரியதம்பி ஓடி வந்து பார்த்தார். அப்போது ஆட்டு கொட்டகையில் இருந்த 8 ஆடுகள் துடி துடித்து செத்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் 7 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. 

    இது குறித்து தகவல் அறிந்த ஏர்ரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெரியதம்பி கூறினார். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×