என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணத்தில் மர்ம விலங்குகள் கடித்து 8 ஆடுகள் பலி
Byமாலை மலர்9 Dec 2019 4:47 PM GMT (Updated: 9 Dec 2019 4:47 PM GMT)
காவேரிப்பட்டணத்தில் ஆட்டு கொட்டகையில் இருந்த 8 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்ததில் துடி துடித்து இறந்து கிடந்தன.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ராயல் நகரை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது45). விவசாயியான இவருக்கு 24 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆடுகளை வீட்டின் அருகே கொட்டகையில் அடைத்து வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.
பின்னர் இரவு 11 மணி அளவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் அதிகமாக கேட்டது. இதனை கேட்ட பெரியதம்பி ஓடி வந்து பார்த்தார். அப்போது ஆட்டு கொட்டகையில் இருந்த 8 ஆடுகள் துடி துடித்து செத்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் 7 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஏர்ரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெரியதம்பி கூறினார். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X