search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery animal bite"

    திருவோணம் அருகே நள்ளிரவில் வீட்டு முன்பு கட்டிப்போட்டிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே சேவல் விடுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோபால் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப்போட்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம விலங்குகள் 6 ஆடுகளின் கழுத்தில் கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு தப்பி சென்று விட்டன.

    இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கோபால் , தனது 6 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் திருவோணம் போலீசிலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆடுகளை கொன்று ரத்தத்தை குடித்தது சிறுத்தையா? அல்லது நரிகளா? என்று தெரிய வில்லை.

    ஏற்கனவே திருவோணம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×