search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மதுரவாயலில் கல்லூரி மாணவர் தற்கொலை

    மதுரவாயலில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போரூர்:

    மதுரவாயல் மேட்டுக்குப்பம் ரோடு மதுரநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வராவ். இவரது மனைவி பாக்ய லட்சுமி. இவர்களது வளர்ப்பு மகன் வெங்கட்ராஜ் (22) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை 8.30மணிக்கு வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். பகல் 11மணி அளவில் வேலைக்கு சென்ற தாய் பாக்யலட்சுமி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் வெங்கட்ராஜ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    எனக்கு வாழ விருப்பம் இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று வெங்கட்ராஜ் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
    Next Story
    ×