search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் நிறுத்தம்
    X
    மின் நிறுத்தம்

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மதுரை:

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை தெற்கு மின் வினியோக செயற் பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    அதேபோல் புட்டுத்தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப் பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×