search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    பெத்தானியாபுரத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்- செல்லூர் ராஜூ தலைமையில் நடக்கிறது

    மதுரை பெத்தானியாபுரத்தில் நாளை முதல்- அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் நாளை (சனிக் கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தாலிக்கு தங்கம் மற்றும் அரசின் சலுகைகள் கோரி மனுக்கள் அளிக்கலாம்.

    ஏற்கனவே அரசின் நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பம் செய்த வர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி யானவர்களுக்கு நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    இந்த குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட கலெக்டர் வினய், மாநக ராட்சி கமி‌ஷனர் விசாகன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்கிறார்கள்.

    எனவே மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை உரிய முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டு கோள்விடுத்துள்ளார்.

    Next Story
    ×