search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    ராயக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்த பூ வியாபாரி உயிரிழப்பு

    ராயக்கோட்டை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பூச்சி மருந்து குடித்து பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்துள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது28). இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் முனியப்பன் நடத்தி வந்த பூ வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனியப்பன் கடந்த 15-ந் தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×