search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவி வி‌ஷம் குடித்த விரக்தியில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    மேட்டுப்பாளையம் அருகே மனைவி விஷம் குடித்த விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள எம்.எஸ்.ஆர். புரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வினோதினி.

    சம்பவத்தன்று ரங்கநாதன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வினோதினி கணவரை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். அவரை ரங்கநாதன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு வினோதினியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மனைவி வி‌ஷம் குடித்ததற்கு தான் தான் காரணம் என நினைத்து மனவேதனை அடைந்த ரங்கநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    Next Story
    ×