என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்19 Nov 2019 4:38 PM GMT (Updated: 19 Nov 2019 4:38 PM GMT)
களக்காட்டில் காதல் திருமணம் செய்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு ஆர்.சி. தோப்புத் தெருவை சேர்ந்தவர் காதர் அம்மாள் (வயது30). இவரும் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த முகம்மது சாதிக் என்ற சேகரும் காதலித்து 19.07.2010-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் முகம்மது சாதிக் தொழில் தொடங்க மனைவி காதர் அம்மாளிடம் பணம் கேட்டார். இதையடுத்து காதர் அம்மாள் தனக்கு சொந்தமான 13 பவுன் தங்க நகைகளையும், மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ரூ.40 ஆயிரமும் கொடுத்தார். ஆனால் முகம்மது சாதிக் கடனை அடைக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
காதர் அம்மாள் தனது மகள்களுடன் தாயார் வீட்டிற்கு வந்து விட்டார். சம்பவத்தன்று தாயார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த காதர் அம்மாளை, அங்கு வந்த முகம்மது சாதிக் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி அவர் நாங்குநேரி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகம்மது சாதிக்கை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X