என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாடானை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 65 பவுன்-பணம் கொள்ளை
Byமாலை மலர்18 Nov 2019 12:19 PM GMT (Updated: 18 Nov 2019 12:19 PM GMT)
திருவாடானை அருகே பூட்டிய வீட்டின் ஜன்னலை உடைத்து 65 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
திருவாடானை அருகே உள்ள பெருவாக்கோட்டையைச் சேர்ந்தவர் சாரதா (வயது55) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து முற்றத்தில் இருந்த ஜன்னலை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து 65 பவுன் நகை, 800 கிராம் வெள்ளி, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.
அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை அறிந்த கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாடானை அருகே உள்ள பெருவாக்கோட்டையைச் சேர்ந்தவர் சாரதா (வயது55) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து முற்றத்தில் இருந்த ஜன்னலை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து 65 பவுன் நகை, 800 கிராம் வெள்ளி, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.
அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை அறிந்த கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X