search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி

    காவேரிபட்டணம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், பணகல் தெருப்பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயக்குமார் (வயது38). இவர் அப்பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். 

    இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து காவேரிபட்டணம் செல்லும் ரோட்டில் உள்ள சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×