என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்15 Nov 2019 10:31 AM GMT (Updated: 15 Nov 2019 10:31 AM GMT)
செங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
புதுக்கோட்டை மாவட்டம் சைவவெள்ள பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருச்சி-தஞ்சை சாலையில் சென்றார்.
புதுக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ் மீது மோதியது. மேலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தஞ்சையை அடுத்த நடுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 60) என்பவர் மீதும் மோதி விட்டு கார் நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் சுரேஷ், கலியமூர்த்தி இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X