என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தூத்துக்குடி:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் பழனிச்சாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் முதன் முறையாக தூத்துக்குடியில் நடத்தப் படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் நடத்தப் படும். இதன் நோக்கம் உள் ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடுகளை படித்திருக்க வேண்டும். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சந்தேகங்களை எளிதில் தீர்க்கலாம். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலை போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் லட்சக் கணக்கானோர் போட்டியிடுவார்கள்.
ஊரக பகுதியில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 450 பேரையும், பஞ்சாயத்துகளில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக சுமார் 7 லட்சம் பேர் வரை போட்டியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்